close
Choose your channels

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் இயக்குனர்

Sunday, March 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில கடந்த சில வருடங்களாக உலக தரத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த துறைக்கு புதியதாக வந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வித்தியாசமான சிந்தனையுடன் வரும் இளம் இயக்குனர்கள் நவீன டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தி உலக தரத்தில் திரைக்கதை அமைத்து படம் இயக்கி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. கதை சொல்வதில் புதுமை, வித்தியாசமான திரைக்கதை, காட்சி அமைப்புகளின் கோர்வை, சரியான நடிகர்களின் தேர்வு, கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் படத்தை கொண்டு சென்ற பாணி ஆகியவற்றை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

இந்நிலையில் 'துருவங்கள் 16' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த இளையதளபதி விஜய் உடனே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளர். 'புத்திசாலித்தனமான பணி. உங்கள் பாணியை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்' என்று பாராட்டியுள்ளார். இந்த தகவலை கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

திறமை உள்ளவர்களை தயங்காமல் பாராட்டு வழக்கம் உடைய விஜய், கார்த்திக் நரேனுக்கு தெரிவித்த இந்த பாராட்டால், கார்த்திக் நரேன் அடுத்த படத்தில் தனது அசுர பலத்தை காட்டுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

"Brilliant job man. Really liked the way you treated the emotions. Best wishes for your future".The caller was 'Ilayathalapathy vijay' sir 😱

— Karthick Naren (@karthicknaren_M) March 4, 2017

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.