close
Choose your channels

ஓடும் காரில் தந்தைக்கு மாரடைப்பு: சாமர்த்தியமாக செயல்பட்ட 10 வயது மகன்!

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடும் காரை சாமர்த்தியமாக நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த அவரது 10 வயது மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் நேற்று அவர் வேலைக்கு செல்லும்போது மகனையும் காரில் சிவகுமார் அழைத்து சென்றுள்ளார்.

காரை சிவகுமார் ஓட்டிக்கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். இதனை அருகில் இருந்து பார்த்த அவரது மகன் அதிர்ச்சியடைந்தாலும், கட்டுப்பாடின்றி சென்ற காரை சமயோசிதமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தந்தையை இழந்த சோகத்திலும் விபத்தை தவிர்க்க சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.