close
Choose your channels

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: சிஎஸ்கே வியூகங்கள் என்ன?

Friday, April 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த ஐபிஎல் தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகங்கள் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக ருத்ராஜ் அல்லது ஜெகதீசன் ஆகிய இருவரில் ஒருவர் டூபிளஸ்சஸ் உடன் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோர் களமிறங்கலாம்.

பந்துவீச்சை பொருத்தவரை தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர்கள் களமிறங்கலாம். மொயின் அலி, பிராவோ ஆகியோர்கள் ஆல்ரவுண்டர் என்பதால் இருவரும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.