close
Choose your channels

அதிமுக இதற்கு அனுமதிக்காது… இது தவறான பிரச்சாரம்… விளக்கும் அதிமுக தரப்பு!

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னியாகுமரி பகுதியில் கொள்கலன் (container terminal port) துறைமுகத்தை அதிமுக அரசு அமைக்கப் பேவதாக திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகிறது. இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை என கன்னியாகுமரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

“கன்னியாகுமரி பகுதியில் கொள்கலன் முனைய துறைமுகம் கட்டப்பட போகிறது என்ற கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி. அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கும் வாக்குகளை பெறுவதற்கும் செய்கிறார்கள். கன்னியாகுமரியில் ஒரு கொள்கலன் முனைய துறைமுகத்தை உருவாக்க அதிமுக எப்போதும் அனுமதிக்காது” என தமிழக முதல்வர் விளக்கம் அளித்து உள்ளார்.

“வெற்றிநடை போடும் தமிழகம்” எனும் தலைப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கன்னியாகுமதி ஒட்டியுள்ள பகுதிகளில் பிரச்சாரக் கூட்டத்தில் வரும் அவர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.