close
Choose your channels

3 மொழிகளில் தனுஷின் அடுத்த படம்: படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவான ’வாத்தி’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.