close
Choose your channels

தேர்தல் ஆணையத்திடம் இருந்து தினகரனுக்கு கிடைத்த பரிசு!

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரட்டை இலை சின்னம், குக்கர் சின்னம் ஆகியவற்றுக்காக சட்டப்போராட்டம் நடத்தி தோல்வி அடைந்த தினகரனுக்கு கடைசியில் பொது சின்னமாவது கிடைக்குமா? என்ற நிலை இருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் ஆணையம் அவருடைய கட்சிக்கு பொது சின்னம் வழங்க ஒப்புக்கொண்டது. அதன்படி தினகரன் கட்சி சார்பில் போட்டியிடும் 40 மக்களவை வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'பரிசுப்பெட்டி' சின்னத்தை தற்போது வழங்கியுள்ளது.

குக்கர் சின்னத்தை ஒருசில நாட்களில் பிரபலமாக்கி ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றது போல் மீதமிருக்கும் இந்த குறுகிய காலத்தில் பரிசுப்பெட்டியை தமிழக மக்களிடம் தினகரன் கொண்டு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இருப்பினும் பரிசுப்பெட்டி சின்னம் அறிவித்த ஒருசில நிமிடங்களில் இந்த சின்னம் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டதை பார்க்கும்போது உதயசூரியன், இரட்டை இலையை இந்த பரிசுப்பெட்டி மூழ்கடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.