close
Choose your channels

லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Wednesday, July 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

மம்முட்டி நடித்த ’ஆனந்தம்’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் ’ரன்’ ’சண்டக்கோழி’ ’பையா’ ’அஞ்சான்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ’சண்டக்கோழி 2’ என்ற படத்தை இயக்கிய பின்னர் லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்பொத்திநேனி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்திநேனி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. மூன்று வருடங்களுக்கு பின் லிங்குசாமி இயக்கும் இந்தப் படம் அவருக்கு திருப்புமுனையை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.