close
Choose your channels

சமந்தாவை ஏமாத்திட்டாங்க: 'தி ஃபேமிலிமேன் 2' குறித்து மனோபாலா பேட்டி!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழகத்தின் பிரபலங்களான பாரதிராஜா சீமான் உள்ளிட்ட பலரும் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசும் இந்த தொடரை நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது

இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த இயக்குனரும் நடிகருமான மனோபாலா ’விடுதலைப் புலிகள் குறித்த விவகாரத்தை பேசுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்றும், அப்படி என்றால் அதுகுறித்த படத்தில் நடிப்பதற்கு எவ்வளவு தகுதி வேண்டும் என்பதை புரிந்துகொண்டு சமந்தா செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

மேலும் இது புரட்சிகரமான கேரக்டர் என்று சமந்தாவிடம் கூறி இயக்குனர் ஏமாற்றி இருப்பார் என்றும் தற்போது சர்ச்சைக்குள்ளான நிலையில் சமந்தா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்படியே பொது மன்னிப்பு கேட்டாலும் தயாரிப்பு தரப்பினர் தான் இதற்கு முழு பொறுப்பு என்றும் இந்த தொடரை நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழன் திருப்பித் தந்தால் யாரும் தாங்க மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வடிவத்தை தற்போது வீடியோ வடிவில் பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.