close
Choose your channels

எத்தனை பேர் குறை சொன்னாலும் 'தேவர் மகன்' சிறந்த படம் தான்: மோகன் ஜி பதிவு யாருக்கு?

Saturday, June 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்’ படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பல ஆண்டுகளுக்கு முன் தெரிவித்த கருத்துக்கள் இணையதளங்களில் சர்ச்சையாகி வரும் நிலையில் ’யார் என்ன சொன்னாலும் ’தேவர் மகன்’ படம் மிகச் சிறந்த படம் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த ’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசிய போது ’கமல்ஹாசன் போன்ற ஒரு ஆளுமையானவர் என்னுடைய படத்தை பற்றி பேச போகிறார் என்ற போது நான் எமோஷனலாக இருந்தேன். ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கடிதம் அன்றைக்கு இருந்த கோபத்தால் எழுதப்பட்டது. அப்போது எனக்கு வாசிப்பு பழக்கம் கிடையாது, தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் ஒருவரான கமல்ஹாசன் என் படம் பார்த்தது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தை பார்த்துவிட்டு அவர் என்னை அங்கீகரித்து என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார் என்று கூறினார்

இந்த நிலையில் மாரி செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ’தேவன் மகன்’ படம் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்களை குறிப்பிட்ட கமல் ரசிகர்கள் அவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’திரௌபதி’ உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி ’தேவர் மகன்’ படம் குறித்து கூறியதாவது: “தேவர் மகன் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. 30 வருடங்கள் ஆகியும் இப்படி ஓர் ஆழமான தென் மாவட்ட கதையை இதுவரை யாரும் சொல்லாததே இந்தத் திரைப்படத்தின் தனித்தன்மை.. எத்தனை பேர் குறை சொன்னாலும் காலத்தால் மறைக்க முடியாத காவியம் #தேவர்மகன்”

இந்த பதிவில் அவர் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மாரி செல்வராஜுக்கு தான் இந்த பதிவு என புரிந்து கொள்ளப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.