close
Choose your channels

தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த திமுக பிரமுகர் தலைமறைவு

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
DMK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துக்குடி அருகே சொந்த தம்பியையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தலைமறைவான திமுக பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருப்பவர் பில்லா ஜெகன்.  இவருக்கும், இவருடைய தம்பி ஆனந்தன் என்பவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வருவதாக தெரிகிறது. இந்த தகராறு இன்று அதிகாலை தீவிரமடைந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும், ஒரு கட்டத்தில் தம்பி மீது கடும் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், தனது தம்பி ஆனந்தனை சுட்டுக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார்  சம்பவ இடத்துக்குச் சென்று ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பியை கொலை செய்துவிட்டு தலைமறைவான பில்லா ஜெகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். உயிரிழந்த ஆனந்தனுக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos