close
Choose your channels

போதை ஆசாமியிடம் சிக்கிய கருநாகம்: கொத்தி, கொத்தி உயிரிழந்த பரிதாபம்

Saturday, January 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தவ்சா என்ற பகுதியில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் அங்கிருந்த கருநாகம் ஒன்றிடம் போதையில் வம்பிழுத்துள்ளார். அந்த கருநாகம் சீறியபடி படமெடுத்து இருந்து நிலையிலும் அதனை அவர் விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்ததார். அந்த கருநாகம் அவரை சரமாரியாக கொத்தியும் அந்த போதை நபர் அசரவில்லை. ஒரு கட்டத்தில் அந்த பாம்பை தனது கழுத்தில் துண்டுபோல் சுற்ரிக்கொண்டார்.

மீண்டும் மீண்டும் பலமுறை அந்த போதை நபரை கொத்திய பாம்பு கடைசியில் கடைசியில் உயிரை விட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் சுற்றி இருந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தனர். கருநாகம் பலமுறை கொத்தியும் அந்த போதை நபர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஒரு திரைப்படத்தில் வடிவேலுவை சுற்றி நின்ற வெறி நாய்கள் கடித்து, அதன் பின் அந்த நாய்கள் இறந்து போகும் காட்சி தான் ஞாபகம் வருவதாக சமூக வலைதள பயனாளிகள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.