close
Choose your channels

கமலிடம் சாட்டையடி கேள்வி கேட்ட ரித்விகா

Saturday, September 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் பிக்பாஸ் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதுகுறித்து எதையும் கண்டுகொள்ளாமல் இந்த வாரமும் யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார். கண்டிப்பாக ஐஸ்வர்யாவையும் அவர் இந்த வாரம் காப்பாற்றி விடுவார்.. இந்த செயல் பிக்பாஸ் மீது பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கும் வெறுப்பை தந்தது

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றார். அதாவது இந்த பிக்பாஸ் வீட்டில் யார் தொடரக்கூடாது என்று விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்க அதற்கு ரித்விகா, ஐஸ்வர்யாவின் பெயரை கூறுகிறார்

ஐஸ்வர்யா நாமினேஷனில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறார். அவர் மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்கு பெற்று இந்த வீட்டில் தொடர்ந்து நீடித்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவரை இரண்டு முறை அவரது தோழி யாஷிகா காப்பாற்றியுள்ளார் என்று கூறினார். இதனை ஜனனியும் வழிமொழிய ஐஸ்வர்யா இதற்கு பதில் கூற வந்தார். ஆனால் கமல் இதனை அனுமதிக்கவில்லை. ரித்விகா இன்று கேட்ட சாட்டையடி கேள்வி கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் நிர்வாகிகளுக்கும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரியாலிட்டி ஷோவில் கொஞ்சமாவது நேர்மை வேண்டாமா பிக்பாஸ்? ரித்விகாவின் கேள்விக்கு முடிந்தால் நியாயமான பதிலை கூறுங்கள் பார்ப்போம் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.