close
Choose your channels

முகநூலில் காதல்: 13 வயது பள்ளிச்சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Friday, October 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி ஒருவர் முகநூலில் சாட்டிங்கில் மூழ்கி வாலிபர் ஒருவரை காதலித்ததை அடுத்து அவருக்கு நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமி ஒருவருக்கு முகநூல் மூலம் தரணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி முகநூலில் சாட்டிங் செய்ததை அடுத்து நட்பு காதலாக மாறியுள்ளது

இந்த நிலையில் தனது காதலனை நேரில் பார்க்க வேண்டும் என விரும்பிய 13 வயது சிறுமி இதுகுறித்து அவரிடம் கேட்டு உள்ளார். அவர் உடனே தான் இருக்கும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வரச் சொல்லியுள்ளார்

இந்த நிலையில் முகநூலில் அறிமுகமான இன்னொரு நண்பரான விபின் ராஜ் உதவியுடன் அவருடைய காரில் சிறுமி, காதலனை பார்க்க கோழிக்கோடு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரில் விபின்ராஜின் நண்பர்கள் இருவரும் ஏறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் காரை நிறுத்திய விபின்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 13 வயது சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர் ஓசூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு அவர்கள் தலைமறைவானார்கள்

இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது முகநூல் காதலனிடம் சிறுமி போனில் கூறியுள்ளார். உடனடியாக அவர் ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்து அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமிக்கு அவர் அடைக்கலம் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தரணியும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து விரட்டி உள்ளார்

இந்த நிலையில் தங்களது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் செல்போன் டிராக் செய்யப்பட்டது. அப்போது ஓசூர் பேருந்து நிலையத்தில் அந்த சிறுமியின் செல்போன் டவர் காண்பித்ததை அடுத்து அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார் சிறுமியையும் தரணியையும் கண்டுபிடித்தனர்

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தரணியை கைது செய்த போலீசார் பின்னர் காரில் பலாத்காரம் செய்த விபின்ராஜ் உள்பட மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 13 வயது சிறுமிக்கு முகநூல் காதலால் ஏற்பட்ட கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.