close
Choose your channels

பேஸ்புக் காதல் விபரீதம்! பிளான் போட்டு கழட்டி விட்ட காதலன்!  விபரீத முடிவு எடுத்த கல்லூரி மாணவி!

Wednesday, May 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, கல்லூரி மாணவியை ஏமாற்றிவிட்டு காதலன் தலைமறைவானதால் அபிநயா என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபிநயாவிற்கு பேஸ்புக் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது. பின் இருவரும் அவ்வபோது நேரில் சந்தித்து பேசி, தங்களுடைய காதலை வலுப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அபிநயா தன் மீது வைத்துள்ள காதலை பயன்படுத்திக்கொண்டு, பாலன் பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாலன் திருமணம் செய்து கொள்வதாக அபிநயாவிற்கு ஆசை காட்டி, வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார்.

பாலன் பேச்சை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய அபிநயாவை சேலம் அழைத்து சென்று, ரூம் எடுத்து தங்கிவிட்டு, அவரை சேலம் பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு தலைமறைவானார் அவருடைய காதலன்.

இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி இது குறித்து கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் பொள்ளாச்சிக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். பொள்ளாச்சிக்கு சென்று புகார் கொடுத்த போதும் புகாரை ஏற்க மறுத்த போலீசார் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளிக்குமாறு அலைக்கழித்துள்ளனர்.

இப்படி இரண்டு மாதங்கள் தன்னுடைய வாழ்க்கைக்காக போராடி வந்த மாணவி, ஒரு நிலையில் மன உளைச்சல் அதிகரித்து தற்போது தற்கொலை செய்து கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இவருடைய தற்கொலை குறித்து போலீசார் கல்லூரி மாணவியை ஏமாற்றிய பாலன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.