close
Choose your channels

விஜய் படத்தை அடுத்து சிரஞ்சீவி படத்திற்கும் ஏற்பட்ட சோகம்!

Friday, May 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று தீவிபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமான சோகமான சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் படத்தை அடுத்து சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்பட பல பிரபல நடிகர்கள் நடித்து வரும் 'சைரா ஸ்ரீநரசிம்மரெட்டி' படத்திற்காக போடப்பட்டிருந்த செட்டிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் அருகே 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான அரங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக தயாரிப்பாளரின் பண்ணை வீட்டில் பிரமாண்டமாக செட் போடப்பட்டிருந்ததாகவும், இந்த செட்டில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் மீண்டும் செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.