close
Choose your channels

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்: முதல்முதலில் வடிவேலு செய்யும் முயற்சி!

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்றும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும், ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் காமெடி வேடத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் வடிவேலு ரீஎண்ட்ரி ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வடிவேலு, ‘ எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள வெளியே, சந்தன மல்லிகையில் உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு ட்ராப் சாங் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்த வீடியோவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதுவரை வடிவேலு டிராப் சாங் பாடியது இல்லை என்ற நிலையில் முதல் முதலாக அந்த பாடலை பாடும் முயற்சியை எடுத்துள்ளதாகவும் இந்த பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வடிவேலு, ராஜா, ரெடின்கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சுராஜ் இயக்கி வருகிறார் என்பதும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.