close
Choose your channels

உதயநிதி-மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் இதுவா?

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளி வந்தது என்பதை பார்த்தோம். ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் வடிவேலு முக்கிய கேரக்டரிலும் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. உதயநிதியின் திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கும் நடிகர் வடிவேலு காமெடி கேரக்டரில் மட்டுமின்றி குணசித்திரம் கலந்த ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி அப்பாவாக நடித்த தம்பி ராமையா கேரக்டர் போன்று இந்த படத்தில் வடிவேலு கேரக்டர் இருக்கும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. எனவே இதுவரை இல்லாத அளவில் ஒரு வித்தியாசமான வடிவேலுவை இந்த படத்தில் பார்க்கலாம் என்று கூறபடுகிறது.

அதே போல் இந்த படத்தில் இணைந்தது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியபோது ’ஒரு திறமையான டீமில் நான் இணைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிப்பாக இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும். வடிவேலு அவர்களுடன் நடிப்பது எனக்கு ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

‘மாமனிதன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு, சேலம் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.