close
Choose your channels

ஸ்ரீதேவி மரணம் குறித்து தடயவியல் சோதனை அறிக்கை கூறுவது என்ன?

Monday, February 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியில் கண்டுபிடிக்க துபாயில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் நடிகை ஸ்ரீதேவி மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என்றும் தடயவியல் சோதனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், இந்த பணி முடிந்த பின்னர் அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்படுகிறது.

அனேகமாக ஸ்ரீதேவியின் உடல் இன்னும் சில மணி நேரங்களில் மும்பைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது இல்லம் அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அதேபோல் நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த பல விஐபிக்கள் மும்பைக்கு சென்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.