close
Choose your channels

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

Friday, August 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதை அடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணண குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் வாஜ்பாய் உடல் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் கூறியிருந்த நிலையில் சற்றுமுன்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டு ஸ்மிரிதி ஸ்தல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டிருக்கும் அலங்கார வாகனத்தின் பின்னே சென்று கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருசில மணி நேரத்தில் வாஜ்பாய் உடல் நல்லடக்கம் செய்யப்படும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.