close
Choose your channels

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் வகுப்புகள் ரத்து: தமிழக அரசு உத்தரவு

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருவதை முன்னிட்டு நாளை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஏற்கனவே 9 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக உயர் கல்வித் துறை தெரிவித்திருந்தது 

இந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் செய்முறை வகுப்புகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos