close
Choose your channels

அம்பேத்கார்-மோடி ஒப்பீடு செய்த இளையராஜா குறித்து ஆளுனர் கருத்து!

Sunday, April 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரதமர் மோடியையும் சட்டமேதை அம்பேத்காரையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்து திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இயக்குனர்கள் மாரிசெல்வராஜ், சீனு ராமசாமி ஆகிய இருவரும் இருவேறு மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.
விழித்துக்கொள் தமிழகமே !!!! என்று கூறியுள்ளார்.

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா கூறிய கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.