close
Choose your channels

திலீப் ஜாமீன் மனு: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கனவே அங்கமாலி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் கேரள ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக கேரள ஐகோர்ட்டில் திலீப் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுமீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று அந்த மனுவும் அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 50 நாட்களுக்கும் மேல் அவர் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் திலீப்பின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து வீடியோ கான்பிரன்ஸ் முலம் விசாரணை செய்த நீதிபதி, திலீப்பின் காவலை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.