close
Choose your channels

நயன்தாராவின் 'அறம்' படத்தின் மெயின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

Friday, November 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அவருடைய பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அனுபவம் உள்ள நடிகையான நயன்தாராவின் கலெக்டர் வேட நடிப்பை காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தண்ணீர் பிரச்சனை சம்பந்தபட்டது என்று பல ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருந்தாலும் இதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் மெயின் கதை சமீபகாலமாக அடிக்கடி நடக்கும் திறந்து வைக்கப்பட்ட போர்வெல் பள்ளங்களில் சிறுகுழந்தைகள் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த கதை என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கோபி நயனார் இயக்கி வரும் இந்த படத்தில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ் - ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும், வேலு ராமமூர்த்தி, ஈ ராம்தாஸ், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் வலுவான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, லால்குடி இளையராஜா கலை இயக்கம் , கோபி கிருஷ்ணா எடிட்டிங், பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, என தலைச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.