close
Choose your channels

தங்கை முறை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கொலை: மனைவியும் தற்கொலை!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கை முறை உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் திருமணம் செய்த பெண்ணும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நெல்லையை சேர்ந்த காளிராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மேகலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அண்ணன் தங்கை உறவு இருப்பதால் இந்த திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்

இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காளிராஜ் தனது மனைவியுடன் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் திடீரென கடந்த 10ஆம் தேதி காளிராஜ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேகலா திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மேகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்

அண்ணன் தங்கை உறவு முறை கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டதில் இருவரும் அடுத்தடுத்து கொலை மற்றும் தற்கொலையால் மரணம் அடைந்ததால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.