close
Choose your channels

துரைமுருகனை அடுத்து வசந்தகுமார்: வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு!

Sunday, April 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் சமீபத்தில் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த ரெய்டுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். வசந்தகுமாரின் மைத்துனர் வீடு உள்பட ஒருசிலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமாரை எதிர்த்து பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.