close
Choose your channels

விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார்: நடிகையின் பாலியல் புகாருக்கு இயக்குனர் விளக்கம்

Monday, May 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தபோது தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் பிரபல நடிகை ஏசியா அர்ஜெண்டோ. இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, 'இதே கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள கடந்த 1997ஆம் ஆண்டு நான் வந்திருந்தபோது என்னை தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு வயது 21 என்பதால் அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளில் அவர் கூறியபடியெல்லாம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இல்லையெனில் என் கேரியரை அவர் நாசமாக்கிவிடுவார் என்பதை அறிந்தேன்' என்று கூறினார்.

நடிகை ஏசியா அர்ஜெண்டோ குற்றச்சாட்டால் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏசியாவின் குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் ஹார்வியின் வழக்கறிஞர், 'நடிகை ஏசியா இயக்குனர் ஹார்வியுடன் விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார். அதன்பின்னர் ஹார்வி தயாரித்த 'பி மங்கீ' என்ற படத்தில் நடித்ததில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.