close
Choose your channels

ஜெயம் ரவி பட நாயகிக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Friday, May 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த படத்தின் நாயகிக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷின் ’வாட்ச்மேன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தான் சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அவரை சம்யுக்தா தான் கவனித்துக் கொண்டார் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவருடைய பெற்றோர்கள் கொரோனாவில் இருந்து குணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சம்யுக்தாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.