close
Choose your channels

ஜெயம் ரவியின் 'சைரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. படப்பிடிப்பு முடிவடைவது எப்போது?

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ’இறைவன்’ ’சைரன்’ மற்றும் ’ஜெயம் ரவி 30’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சற்று முன் ’சைரன்’ படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்காலில் நடைபெற்று வருவதாகவும் அங்கு ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன் திருமண காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண காட்சியில் ஒரு பாடல் இடம் பெறுவதை அடுத்து இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக இந்த திருமண காட்சி மற்றும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது என்றும் இதனை அடுத்து ஜெயம் ரவி ’பொன்னின் செல்வன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி இந்த படத்தில் கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும், ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.