close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

Saturday, April 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’பூமி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது ’பொன்னியின் செல்வன்’ ’ஜனகணமன’ மற்றும் ’அகிலன்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் ’அகிலன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்த படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார் என்றும், இந்த படத்திற்கு மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் திரைக்கதை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.