close
Choose your channels

நயன்தாரா, ஓவியாவை அடுத்து ஜோதிகாவிற்கு கிடைத்த பெருமை!

Thursday, August 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை காட்சி திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது.

இருப்பினும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் மிக அரிதாகவே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதுவரை நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா', ஓவியாவின் '96ml' உள்பட ஒருசில படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் தற்போது ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படமும் நாளை அதிகாலை காட்சி திரையிடப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் நாளை அதிகாலை 5.30 மணி காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள ஜாக்பாட்' படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் சிறப்பான புரமோஷனால் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.