close
Choose your channels

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

Monday, April 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் சிலவும் வடமாநில வடமாநிலங்கள் சிலவும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலாளர் சமீபத்தில் பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் நமது முதல்வர் யாருடைய உத்தரவுக்காக காத்திருக்கின்றார்? அவர் தனது எஜமானின் உத்தரவுக்காக காத்திருகின்றாரா? என மக்களின் குரலை நான் முன்மொழிகிறெனெ. உடனே முதல்வர் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும்

மேலும் கமல்ஹாசன் இன்னொரு டிவிட்டில் கூறியபோது, ‘அண்டை மாநிலங்கள் சில கோவிட் 19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் பெறும் நேரமல்ல, மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.