close
Choose your channels

ஐந்து இறுதி போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசன் கொடுத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் நாளை அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியில் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர் மற்றும் நிரூப் ஆகிய ஐவருக்கும் கமலஹாசன் தனது அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜூ ஒரு சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பதால் அவருக்கு ஒரு பேனாவும், பிரியங்கா ஒரு சிறந்த தொகுப்பாளினி என்பதால் அவருக்கு ஒரு ஃபேன்சி மைக்கும், அமீர் ஒரு நல்ல டான்சர் என்பதால் அவருக்கு சிகப்பு நிறத்தில் ஒரு ஷூவும், பாவனிக்கு ஒரு கைக்கடிகாரமும் நிரூப்புக்கு ஒரு தொப்பியும் கமல்ஹாசன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.