close
Choose your channels

அனிருத் இசையில் முதல்முறையாக பாடிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே பல பாடல்கள் எழுதி பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் சிங்கிள் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் அறிவித்து உள்ளார். மேலும் இந்த பாடலில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களே இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் இந்த பாடலை அவரே பாடி உள்ளார் என்றும் இந்த பாடலை பதிவு செய்யும் போது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார் .

’பத்தல பத்தல’ என்று தொடங்கும் இந்த பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.