close
Choose your channels

கட்சியை பலப்படுத்த கமல் எடுக்கும் அதிரடி முடிவு!     

Friday, August 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே நேரத்தில் பிக்பாஸ், திரைப்பட படப்பிடிப்பு மற்றும் அரசியல் என மூன்று துறைகளில் பிசியாக இருந்து வரும் கமல்ஹாசன், விரைவில் அவர் நடிக்க இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் தனது அரசியல் கட்சியை பலப்படுத்த அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார். தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கு என ஒரு சொந்த தொலைக்காட்சி சேனலை வைத்திருக்கும் நிலையில், மக்கள் நீதி மையம் கட்சிக்காக ஒரு புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய சேனல் மக்கள்நீதிமய்யம் கட்சிக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் விரைவில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் அவர்கள் தனது பிறந்த நாளிலிருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பணியை தொடங்குவார் என்றும் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் 'இந்தியன் 2' மற்றும் 'தலைவன் இருக்கின்றான்' படங்களின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் சேனல் ஆரம்பிக்கும் பணிகள், அதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் என கமலஹாசன் அதிரடியாக களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.