close
Choose your channels

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய மூன்று முன்னணி நடிகர்கள்

Tuesday, July 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது என்பது அவ்வளவு எளிதல்லா. எவ்வளவு பெரிய பாடகர்களாக இருந்தாலும் அவர்களிடம் கடுமையாக வேலை வாங்குவார். இதனை பல பாடகர்கள், பாடகிகள் தங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். அதற்கு ஒரே காரணம், பாடல் மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற ஒரே காரணம்தான்

அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட பல முன்னணி பாடகர்களே திணறியிருக்கும் நிலையில் மூன்று நடிகர்கள் அவருடைய இசையில் பாடியுள்ளனர். ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். தெனாலி பாடலில் 'இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ என்ற பாடலை கமல்ஹாசனும், சித்ராவும் பாடியிருப்பார்கள். இரண்டாவதாக ரஹ்மான் இசையில் பாடிய நடிகர் சிம்பு. 'காதல் வைரஸ்' என்ற படத்தில் ஒரு பாடலும், அச்சம் என்பது மடமையடா' படத்தில் 'ஷோக்காலி' என்ற பாடலையும் சிம்பு பாடியுள்ளார்.

மூன்றாவது தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிகில்' படத்தில் தளபதி விஜய் பாடியுள்ளார். 'வெறித்தனம்' என்று தொடங்கும் இந்த பாடல் வெளிவந்தவுடன் தான் விஜய்யை ரஹ்மான் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.