close
Choose your channels

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கட்சியில் இருந்து வெளியேறிய கமீலா நாசர்: காரணம் இதுதான்!

Thursday, July 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிய பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனுக்கு தற்போது தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் நடிக்கும் திரைப்படம் ஒன்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16-ஆம் தேதி மாலை 06.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசர் மகன் அபிஹாசனுடன், அசோக் செல்வன், ரேயா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட கமல்ஹாசன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கமல்ஹாசனுக்கும் தனுஷுக்கும் தனது நன்றியை கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிப்புலகின் ஆசான் கமல்ஹாசன், நடிப்பில் அசுரன் தனுஷ் இருவரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சம்மதம் தெரிவித்ததற்கு நன்றி! இதைவிட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசரின் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.