close
Choose your channels

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

Tuesday, June 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை பெண் இயக்குநர் சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடித்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இயக்குநர் சஞ்சனா ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் இந்த செய்தியை கர்ணம் மல்லேஸ்வரி பட தயாரிப்பாளர் கோனா வெங்கட் மறுத்துள்ளார். இயக்குநர் சஞ்சனா ரெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் மூன்று நாட்களாக அவர் சரியாக சாப்பிடாததால் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார் என்றும் அவர் மருத்துவமனையில் சாதாரண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்

கர்ணம் மல்லேஸ்வரி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே அப்படத்தின் இயக்குனர் சஞ்சனா ரெட்டி மருத்துவமனையில் அட்மிட் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.