close
Choose your channels

ரஜினியின் கருத்து எனக்கு சுத்தமாக புரியவில்லை: ரஜினி நண்பரின் மகன் பேட்டி!

Sunday, December 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த ரஜினியின் கருத்து தெளிவாக இல்லை என்றும் தனக்கு சுத்தமாக புரியவில்லை என்றும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ப சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து சமீபத்தில் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் தற்போது நடந்து வரும் வன்முறை தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாகவும், சட்டப்படியே அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த கருத்தை விமர்சனம் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை எனக்கூறலாம். அந்த வகையில் ரஜினியின் டுவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை எம்பியும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்களின் மகனான கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் ’குடியுரிமை சீர்திருத்த சட்ட விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு தனக்கு குழப்பமாக இருப்பதாவும், அவரது கருத்து தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை ரஜினி ஆதரிக்கிறாரா? அல்லது எதிர்க்கின்றாரா? என்பதை அவர் தெளிவாக கூறினால் தான் அனைவருக்கும் இந்த குழப்பம் தீரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.