close
Choose your channels

அமீரின் 'நாற்காலி'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Sunday, December 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மௌனம் பேசியதே', 'ராம்', மற்றும் ’பருத்தி வீரன்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கிவரும் ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான இயக்குனர் அமீர் சமீபத்தில் ’நாற்காலி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை இயக்குனர் துரை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜீத்தின் ’முகவரி’, சிம்புவின் ’தொட்டி ஜெயா’, விக்ரமின் ’காதல் சடுகுடு’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான சுந்தர் சி நடித்த ’இருட்டு’ என்ற படத்தை இவர்தான் இயக்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’நாற்காலி’ படத்தில் அமீர் ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது இதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடிகை சாந்தினி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக மலையாள பட நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.