close
Choose your channels

கார்த்திக் நரேனின் 'நரகாசுரனுக்கு' நல்ல காலம் பிறந்துவிட்டதா?

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’துருவங்கள் 16’ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ’நரகாசுரன்’. அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாறன், சந்தீப் கிஷான் உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 2017ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் இந்த படத்தில் ஒரு சில பிரச்சினைகள் இருந்ததன் காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளின்படி இந்த படத்தை வட இந்திய ஓடிடி நிறுவனமான சோனி லைவ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் ஜூன் மாதம் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

’நரகாசுரன்’ படத்தை அடுத்து கார்த்திக் நரேன் அருண்விஜய் நடித்த ’மாஃபியா’ என்ற படத்தை இயக்கினார் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.