close
Choose your channels

அஜித்திற்கு 1.25 கோடி நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட நடிகை

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடியும் பெப்சி அமைப்பினர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் பிஆர்ஓ சங்கத்திற்கு ரூபாய் 2.5 லட்சமும் வழங்கியதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இதில் பிரதமர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சமும் முதல்வர் நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சமும் பெப்சி அமைப்பினர்களுக்கு ரூ.25 லட்சமும் அஜித் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் இந்த நிதி உதவி குறித்து ஊடகங்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜீத் ரசிகர்களுடன் சமீபத்தில் கடுமையாக மோதி அஜித்திடமே சமூக வலைத்தளம் மூலம் புகார் கூறிய நடிகை கஸ்தூரி தற்போது அஜீத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. என்றும் நீடூடி வாழ்க’ என்றும் தெரிவித்துள்ள கஸ்தூரி, தல அஜித்தின் உதவி செய்யும் மனப்பான்மை இதன் மூலம் தெரிய வருகிறது என்றும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தமிழ் திரைப்படத் துறையிலிருந்து இவ்வளவு பெரிய தொகை வேறு யாரும் கொடுக்கவில்லை என்றும் கஸ்தூரி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பெப்சி தொழிலாளர்கள் ரூபாய் 25 இலட்சம் நிதி உதவி செய்த அஜித்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கஸ்தூரியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த அஜித் ரசிகர்கள் கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.