close
Choose your channels

மீண்டும் போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்? ஹீரோ யார் தெரியுமா?

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ’சாணிக்காகிதம்’ என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ’மாமன்னன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை ஆண்டனி பரத்வாஜ்  என்பவர் இயக்க இருப்பதாகவும், ஹோம் மீடியா மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள கீர்த்தி சுரேஷுக்கு போலீஸ் கேரக்டர் என்று கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷ் சிறப்பு பயிற்சிகளும் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.