close
Choose your channels

எஸ்பிபி பெயரில் தேசிய விருது: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை!

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை பல திரையுலக பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளர், இயக்குனர் கேயார், எஸ்பிபி குறித்து கூறியதோடு, அவரது பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எஸ்பிபியின் மறைவைக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவருடைய மறைவு என்னைப் பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக எஸ்பிபி இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்ம பூஷண் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபியின் சாதனையைப் போற்றும் விதமாகச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபியின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும்கூட".

இவ்வாறு தயாரிப்பாளர் கேயார் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.