close
Choose your channels

யார் வில்லன் என்பது கிளைமாக்ஸில்தான் தெரியும். கே.வி.ஆனந்த்

Monday, August 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அனேகன்' வெற்றிக்கு பின்னர் விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் நடிப்பில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த், முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை தற்போது தொடங்கியுள்ளார்.
விஜய்சேதுபதி-டிராஜேந்தர் என வித்தியாசமான கூட்டணியை இணைத்துள்ள கே.வி.ஆனந்த், இந்த படத்தின் ஹீரோ யார், வில்லன் யார் என்பது கிளைமாக்ஸில்தான் தெரிய வரும் என்றும், இருவரின் கேரக்டர்களிலும் ஹீரோ, வில்லன் ஆகிய இரண்டு அம்சங்களும் இருக்கும்' என்று கூறினார்.
முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாக படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த படத்தின் பாடல் ஒன்று தென் அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், மொத்த படப்பிடிப்பும் வரும் அக்டோபருக்குள் முடிந்துவிடும் என்றும் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.