close
Choose your channels

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, இயக்கம் உட்பட ஒரே படத்தில் 31 பணிகள்.. தமிழ் பெண்ணின் சாதனை..!

Sunday, April 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கின்னஸ் சாதனையாளர் லாவண்யா என்பவர் ஒரு திரைப்படத்தின் 31 பணிகளை அவரே செய்து சாதனை செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு திரைப்படம் உருவாக வேண்டும் என்றால் ஒரு மிகப்பெரிய டீம் தேவை என்பதும் குறிப்பாக தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், கலை இயக்குனர், ஸ்டான்ட் இயக்குனர், பாடல் ஆசிரியர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மேக்கப் மேன், லொகேஷன் தேடுபவர்கள் என ஒரு பெரிய குழு இணைந்தால் தான் ஒரு திரைப்படம் உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பணிகள் அனைத்தையும் ஒரே ஒருவர் செய்து சாதனை செய்திருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

எஸ் லாவண்யா என்பவர் ஏற்கனவே கின்னஸ் சாதனை செய்திருக்கும் நிலையில் தற்போது அவர் ’பேய் கொட்டு’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் அவர் மொத்தம் 31 துறைகளில் பணிபுரிந்து உள்ளார் என்றும் இந்த படத்தின் நாயகியாக அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹாரர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அவரே தயாரித்து நாயகியாக நடித்தது மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம், இசை, டப்பிங், எடிட்டிங், பாடகி, ஸ்டண்ட் இயக்குனர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர் உள்பட மொத்தம் 31 பணிகளை அவரே செய்திருக்கிறார்

நாம் ஏதேனும் தவறாக செய்ய நினைத்தால் உடனே நம் தலையில் பேய் கொட்டும் என்ற கதை அம்சத்தை கொண்ட இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.