திருமணத்திற்குப் பின்னும் பலவந்தமாக படுக்கைக்கு அழைத்தார்கள்! முன்னணி நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

அனைத்து மொழி திரைத்துறையில், பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள், பரவலாக கூறிவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூறுவதாக சொல்வதுதான்.

சமீபத்தில் 'மீடூ' என்கிற ஹாஷ்டாக் மூலம் பல நடிகைகள் தங்களுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். இதில் இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் வெளியாகி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா தன்னுடைய திரை வாழ்வில் நடந்தவற்றை முதல் முறையாக கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தவர் நடிகை ரிச்சா.

ஒல்லியாக இருக்கும் நடிகைகள் மத்தியில், சற்று புசுபுசுவென்று இருப்பதே இவரின் பிளஸ் என கூறலாம். முன்னணி நடிகையாக இருக்கும் போதே திடீரென திரை உலகை விட்டு சற்று விலகியே இருந்தார். பின் திருமணம் செய்துகொண்டு முழுமையாக திரையுலகிற்கு முழுக்கு போட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் படுக்கைக்கு அழைக்கின்றனர். ஆனால் அவர்களுடைய பெயர் சொல்ல விருப்பம் இல்லை. இதனால் திரைத்துறையை வேண்டாம் என விலகினேன். திருமணத்திற்குப் பின்பு நடிக்க வாய்ப்பு கேட்ட போதும், பலவந்தமாக படுக்கைக்கு அழைத்தனர் இதனால் சினிமா துறையை வேண்டாம் என முடிவு கட்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.

More News

15 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநர்!

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், 15 வயது சிறுமியை ஓட்டுநர் ஒருவர், கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திமுகவில்  இருந்து என்னை நீக்கிய காரணமே வேற: ராதாரவி

'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராதாரவி மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்

மகனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய ஒட்டு மொத்த குடும்பமே கைது!

குடிபோதை அடிக்கடி தகராறு செய்த மகனை பெற்றோர்களும், அவர்களுடைய மற்ற இரண்டு மகன்களும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியதால் ஒட்டுமொத்த குடும்பமே தற்போது ஜெயிலில் உள்ளனர்.

ரஜினியின் 'தர்பார்': நயன்தாரா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

தளபதி 63: விஜய் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்