close
Choose your channels

'விக்ரம்' படத்தில் இருந்து பிரியும் கிளைக்கதை: வேற லெவலில் லோகேஷ் பிளான்!

Tuesday, June 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய படங்களின் கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் இணைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் ’விக்ரம்’ படத்திற்கும் 'கைதி’ படத்திற்கும் ஆன தொடர்பு குறித்து செய்தி ஏற்கனவே வந்த நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தின் கேரக்டர் ஒன்றை தனிப்படமாக இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ’விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தை கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் தனியாக உருவாக்க திட்டமிட்டு நிலையில் தற்போது ’விக்ரம்’ படத்தில் அமர் என்ற கேரக்டரில் நடித்த பகத் பாசில் கேரக்டரை மட்டும் டெவலப் செய்து தனியாக அதை ஒரு திரைப்படமாக எடுக்க லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’விக்ரம்’ படத்தில் வரும் அமீர் கேரக்டரின் முந்தைய பகுதி குறித்த கதை தனியாக ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘கைதி’ திரைப்படத்தில் டில்லி கேரக்டரின் வாழ்க்கையின் நடந்த முந்தைய கதைதான் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக கூறப்பட்டது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.