close
Choose your channels

படப்பிடிப்பில் விபத்து.. 'மாரி 2' நடிகருக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற தமிழ் படத்திலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் உருவான ’2018’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் டொவினோ ’நடிகர் திலகம்’ படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் கொண்டிருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து மருத்துவமனையில் அனுமதி பெறப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் இரண்டு வாரங்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் டொவினோ தாமஸ் காயமடைந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.