தெலுங்கானா என்கவுண்டருக்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்து போஸ்டர்


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேர்களை பிடித்த போலீசார் ஒரு வாரம் விசாரணைக்கு பின்னர் என்கவுண்டர் செய்தனர்.
தெலுங்கானா போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இந்த என்கவுண்டரை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திவரும் மதுரை அஜித் ரசிகர்கள் தெலுங்கானாவில் நடந்த இந்த என்கவுண்டருக்கும், என்கவுண்டரை நடத்திய போலீசார்களுக்கும் பாராட்டு தெரிவித்து முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments