close
Choose your channels

ராஜராஜ சோழன் விவகாரத்தில் ரஞ்சித் கைதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித், சோழமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பேசினார். இதனையடுத்து பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது இரண்டு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குகளின் அடிப்படையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி ரஞ்சித், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுமீது சமீபத்தில் விசாரணை நடந்தபோது ரஞ்சித்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே ரஞ்சித் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.